Thursday, October 8, 2009

Shriya's Aasai



நடிகை ஸ்ரேயாவுக்கு நிறைவேறாத ஆசையொன்று இருக்கிறதாம். சிறு வயதில் இருந்தே நடனத்தை விரும்பி கற்ற தனக்கு சினிமாவில் அந்த நடன தி‌றமையை காட்ட முடியவில்லை என்ற ஏக்கம் இருந்து கொண்‌டே இருக்கிறது என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். முழுநீள நடனப் படம் ஏன்றால் சம்பளம் பற்றி கவலைப்படாமல் நடித்து கொடுப்பேன் என்று சொல்லும் ஸ்ர‌ேயா, இந்த ஆண்டு தனக்கு திருப்புமுனை ஆண்‌டாக இருக்கும் என்று நம்புகிறார். காரணம் இந்த ஆண்டு ஸ்ரேயா விக்ரமுடன் நடித்த கந்தசாமி, விஷாலுடன் நடித்துள்ள தோரணை, சரத்குமாருடன் நடித்துள்ள ஜக்குபாய், தனுஷூடன் நடித்து வரும் குட்டி ஆகிய 4 மிகப்பெரிய படங்கள் வெளியாகின்றன. இதுதவிர இந்தியில் தீபா மேத்தா படமொன்றிலும் ஸ்ரேயா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Recent Comments

Powered by Blogger Widgets